ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு- காருக்குள் இருந்த காவலரை வெளுத்து வாங்கிய கணவர்......

author img

By

Published : Feb 24, 2022, 10:13 AM IST

நெல்லையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த காவலர் ஒருவரை அப்பெண்ணின் கணவர் சராமரியாக தாக்கினார்.

நெல்லையில் திருமணம் மீறிய உறவு- காருக்குள் இருந்த காவலரை வெளுத்து வாங்கிய கணவர்
நெல்லையில் திருமணம் மீறிய உறவு- காருக்குள் இருந்த காவலரை வெளுத்து வாங்கிய கணவர்

திருநெல்வேலி:நெல்லை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் முருகன். இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தினுள் காருக்குள் பெண் ஒருவருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் முருகனை வெளியே அழைத்து அவரை சரமாரியாகத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விசாரணையில், அந்த பெண் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் ஏற்கனவே திருமணமான நிலையில் காவலர் முருகனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதும் தெரியவந்தது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு அந்த பெண் தனது தாயாரை ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது காவலர் முருகன் அவருக்கு சில உதவிகளைச் செய்துள்ளார். அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையறிந்து பெண்ணின் கணவர் மாரிமுத்து காவலருடனான தொடர்பை நிறுத்தும்படி தனது மனைவியிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மாரிமுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் வேலை விஷயமாகச் செல்வதாகக் கூறி விட்டு அடிக்கடி அந்த பெண் காவலருடன் தனியாகச் சந்தித்து வந்துள்ளார். அதன்படி அரசு மருத்துவமனையில் காருக்குள் வைத்து இருவரும் சந்தித்துள்ளனர்.

இதற்கிடையில் எதார்த்தமாக அங்குச் சென்ற மாரிமுத்து, தனது மனைவியின் கார் நிற்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்தபோது உள்ளே காவலர் முருகனுடன் தனது மனைவி சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மாரிமுத்து கார் கதவைத் திறந்து தனது மனைவி மற்றும் முருகனைச் சரமாரியாகத் தாக்கி ஹைகிரவுன்ட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

அதன்பேரில் தற்போது காவல்துறையினர் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்தனர் இதற்கு மாரிமுத்து தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முருகன் தனக்கு டிஜிபி வரை செல்வாக்கு இருப்பதாக மிரட்டுவதாகவும் அவருக்குச் சாதகமாக இந்த விவகாரத்தில் காவல்துறையினர் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் மாரிமுத்து தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கவுன்சிலர்களை கடத்திய எம்.எல்.ஏ? நெல்லை மேயர் பதவியைப் பிடிக்க திமுகவினரிடையே கடும்போட்டி

திருநெல்வேலி:நெல்லை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் முருகன். இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தினுள் காருக்குள் பெண் ஒருவருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் முருகனை வெளியே அழைத்து அவரை சரமாரியாகத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விசாரணையில், அந்த பெண் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் ஏற்கனவே திருமணமான நிலையில் காவலர் முருகனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதும் தெரியவந்தது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு அந்த பெண் தனது தாயாரை ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது காவலர் முருகன் அவருக்கு சில உதவிகளைச் செய்துள்ளார். அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையறிந்து பெண்ணின் கணவர் மாரிமுத்து காவலருடனான தொடர்பை நிறுத்தும்படி தனது மனைவியிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மாரிமுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் வேலை விஷயமாகச் செல்வதாகக் கூறி விட்டு அடிக்கடி அந்த பெண் காவலருடன் தனியாகச் சந்தித்து வந்துள்ளார். அதன்படி அரசு மருத்துவமனையில் காருக்குள் வைத்து இருவரும் சந்தித்துள்ளனர்.

இதற்கிடையில் எதார்த்தமாக அங்குச் சென்ற மாரிமுத்து, தனது மனைவியின் கார் நிற்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்தபோது உள்ளே காவலர் முருகனுடன் தனது மனைவி சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மாரிமுத்து கார் கதவைத் திறந்து தனது மனைவி மற்றும் முருகனைச் சரமாரியாகத் தாக்கி ஹைகிரவுன்ட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

அதன்பேரில் தற்போது காவல்துறையினர் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்தனர் இதற்கு மாரிமுத்து தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முருகன் தனக்கு டிஜிபி வரை செல்வாக்கு இருப்பதாக மிரட்டுவதாகவும் அவருக்குச் சாதகமாக இந்த விவகாரத்தில் காவல்துறையினர் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் மாரிமுத்து தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கவுன்சிலர்களை கடத்திய எம்.எல்.ஏ? நெல்லை மேயர் பதவியைப் பிடிக்க திமுகவினரிடையே கடும்போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.